ஆப்நகரம்

காதலருடன் சேர்த்து வைக்க கோரி காதலி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பாக, காதலருடன் சேர்த்து வைக்க கோரி, இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு .

Samayam Tamil 12 Feb 2019, 10:49 am
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பாக, காதலருடன் சேர்த்து வைக்க கோரி, இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.
Samayam Tamil காதலருடன் சேர்த்து வைக்க கோரி காதலி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!
காதலருடன் சேர்த்து வைக்க கோரி காதலி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!


வேலூர் மாவட்டம் வாலாஜா நரிக்குறவர் காலணியை சேர்ந்த இளம்பெண் கோவை சரளா(18). இவரும் ஆற்காடு அடுத்த வேப்பூர் நரிக்குறவர் காலணி பகுதியை சேர்ந்த பூவரசன் என்பரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பூவரசன் சரளாவை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

பலமுறை பூவரசனிடம் நேரில் பேசியும் திருமணம் செய்ய முன்வராததால் ஆத்திரமடைந்த சரளா, நேற்று இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக சரளாவை மீட்ட இராணிப்பேட்டை மகளிர் போலீசார், சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பூவரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலுடன் சேர்த்து வைக்க கோரி காவல் நிலையத்தின் முன்பு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி