ஆப்நகரம்

அதுக்குனு இவ்வளவு ஸ்லோவா தமிழக அரசே? ஆச்சரியப்படுத்தும் 700 ஏக்கர் தொழிற்பூங்கா!

மிகப்பெரிய தொழிற்பூங்கா அமைக்கும் பணியை, பல ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அரசு கையில் எடுத்து செயல்படுத்த தொடங்கியுள்ளது.

Samayam Tamil 21 Oct 2019, 11:16 am
ஆந்திர மாநிலத்திற்கு அருகே ஸ்ரீ நகரில் இருந்து 16 கி.மீ தொலைவில் திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் தொழிற்பேட்டையை அமைக்க சிப்காட் திட்டமிட்டிருந்தது. இதற்கான நிலத்தை ஏற்கனவே சிப்காட் வசம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்துவிட்டது.
Samayam Tamil Industrial Park


இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், கடந்த ஜூலை மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. அதன்பிறகு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

காமராஜ் நகர் இடைத்தேர்தல்: வசமாக சிக்கிய காங்கிரஸ் கட்சியினர்!

கடந்த 2009ஆம் ஆண்டு ஸ்ரீ நகரம் வளர்ந்து கொண்டிருந்த சூழலில், அப்பகுதியில் மருந்துப் பொருட்கள் மற்றும் வேதிப் பொருட்கள் தொழிற்சாலைகளுடன் கூடிய பூங்கா ஒன்றை கட்டமைக்க சிப்காட் கோரிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது.

ஆனால் அதன்பிறகு இந்த திட்டத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. தற்போது ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு தொழிற்சாலைகளுடன் மணலூர் தொழிற்பூங்காவை செயல்படுத்த மாநில அரசு முன்வந்துள்ளது.

ஸ்ரீ நகரில் 7,500 ஏக்கருக்கும் மேலான இடத்தில் பல்துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அதாவது 27 நாடுகளைச் சேர்ந்த 185 சர்வதேச நிறுவனங்கள் இங்கு கிளை விரித்து செயல்பட்டு வருகின்றன.

நாங்குநேரி: ஓட்டு லிஸ்ட் இல்லை என வாக்காளர்களைத் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!

ஏற்கனவே இருக்கும் ஸ்ரீ நகரின் பத்தில் ஒரு பங்கு அளவில் தான், தற்போதைய தொழிற்பூங்கா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. ஆனால் வருங்காலத்தில் புதிய தொழிற்சாலைகளுடன் பூங்கா விரிவாக்கம் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொழில் வல்லுநர்கள் கூறுகையில், புதிய பூங்காவின் மூலம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மேம்படும். இதற்கு நல்ல பிராண்டிங் தேவைப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இதுபற்றி சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சிலின் முன்னாள் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், புதிய மணலூர் தொழிற்பூங்கா ஸ்ரீ நகருக்கு இணையாக பிரபலப்படுத்தப்பட வேண்டும்.

மூனு நாளைக்கு மூச்சு முட்ட கனமழை; குடையை மறந்திடாதீங்க மக்களே!

முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இந்த பூங்காவின் 20% இடத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் செயல்படும் வண்ணம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி