ஆப்நகரம்

பெருமழையால் கோவில் சுவர் இடிந்தது; சிவகாசியில் 80 ஆடுகள் பலியானதால் கிராமத்தினர் சோகம்!

சுவர் இடிந்து விழுந்ததால், ஏராளமான ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Sep 2018, 3:29 pm
சிவகாசி: சுவர் இடிந்து விழுந்ததால், ஏராளமான ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Goats1


விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்நிலையில் செங்கமல நாச்சியார்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கண்ணன் கோவிலின் சுவர் இடிந்தது.

இது 100 அடி நீளம், 10 அடி உயரம் கொண்டிருந்தது. அப்போது அங்கு கங்காகுளத்தைச் சேர்ந்த முருகனின் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் மழைக்கு ஒதுங்கியிருந்தன. இவை இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன.

அவற்றால் மீண்டும் வர இயலாததால், படுகாயமடைந்து உயிரிழந்தன. இந்த சம்பவத்தில் மேய்ச்சலுக்காக சென்ற முருகன், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கிராம மக்கள் இறந்த ஆடுகளை வெளியே கொண்டு வர முயற்சித்தனர்.

ஆனால் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால், ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதன்மூலம் ஆடுகள் தூக்கப்பட்டன. இந்தப் பணியில் கால்நடைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Nearly 80 goats died at S N Puram near Sivakasi in Virudunagar district.

அடுத்த செய்தி