ஆப்நகரம்

நெடுவாசல் மக்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்..!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வந்த நெடுவாசல் மக்கள் தற்போது போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

TNN 2 Oct 2017, 2:38 pm
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வந்த நெடுவாசல் மக்கள் தற்போது போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
Samayam Tamil neduvaasal people protest temporary vaapus
நெடுவாசல் மக்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்..!


கடந்த 174 நாட்களாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வந்த நெடுவாசல் மக்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெடுவாசல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உட்பட நாடு முழுவதுமுள்ள 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே நெடுவாசல் விவசாயிகள் போராட தொடங்கி விட்டனர். “ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம்” என்ற பெயரில் இயக்கத்தை கட்டமைத்து தொடர்ந்து அறவழியில் போராடி வந்தனர்.

இதன் முதல் கட்டப் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் 2-ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கினர். தினமும் விவசாயிகள், பெண்கள் திரண்டு பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர். போராட்டம் 174 நாட்களை கடந்த போதிலும், மக்களின் கோரிக்கைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் செவி சாய்யக்கவில்லை. தொடர் போராட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

ஒன்ஜிசி மீண்டும் தன் பணிகளை தொடங்குமானால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.

Neduvaasal people protest temporary vaapus
.

அடுத்த செய்தி