ஆப்நகரம்

மார்ச் 1-ல் முதல்வருடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் சந்திப்பு

நெடுவாசல் போராட்டக் குழுவினர் மார்ச் 1-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியை சந்திக்கக உள்ளனர்.

Samayam Tamil 26 Feb 2017, 7:56 pm
சென்னை : நெடுவாசல் போராட்டக் குழுவினர் மார்ச் 1-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியை சந்திக்கக உள்ளனர்.
Samayam Tamil neduvaasal protester will meet tn cm on march 1st
மார்ச் 1-ல் முதல்வருடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் சந்திப்பு


தமிழகத்தின் புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக தமிழகம் முழுவது போராட்டம் நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டதின் மையமாக செயல்படுகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு ஏதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். இந்தநிலையில் நேற்று தமிழக அரசின் சார்பில் மக்கள் நல வாழ்வுதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் போராட்டகார்களை சந்தித்து இந்த திட்டத்திற்கு ஏதிர்ப்பு தெரிவிப்போம் என்று கூறினார். மேலும் போராட்டக் குழுவினர் முதல்வரை சந்திக்க வைப்பேன் என்றும் விஜய்பாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியை சந்திப்பதற்காக இன்று நெடுவாசல் போரட்டாக்குழ்வினர் சந்திப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் முதல்வர் தமிழக பிரச்சனை மற்றும் நீட் தேர்வு குறித்து பிரதமரை சந்திக்க இன்று மாலை டெல்லி விரைந்துள்ளார்.

இதனையடுத்து நெடுவாசல் போராட்டக்குழுவவினருடன் முதல்வர் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வரும் புதங்கிழமை (மார்ச் 1-ம் தேதி) சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பானது தமிழ்க தலைமை செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
neduvaasal protester will meet TN CM on march 1st
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்