ஆப்நகரம்

நீதி விசாரணை வேண்டும்: தமிழிசை

மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

TNN 15 Mar 2017, 8:13 pm
சேலம்: மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil need judicial probe tamilisai
நீதி விசாரணை வேண்டும்: தமிழிசை


தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன், நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாணவர் முத்துக்கிருஷ்ணனின் சொந்த ஊருக்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை, முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அநீதி நடப்பதாக தெரிந்தால் அப்பட்டமாக வெளிப்படுத்த வேண்டும். சாதிய பாகுபாடுகளை களைய சமுதாயத்தில் மாற்றம் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Need Judicial probe: Tamilisai

அடுத்த செய்தி