ஆப்நகரம்

நீரா பானம் உற்பத்தி: மூன்று நிறுவனங்களுக்கு முதல்வர் அனுமதி!!

தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் மூன்று நிறுவனங்களுக்கு நீரா பானம் உற்பத்தி உரிமையை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Samayam Tamil 2 Jun 2018, 12:21 pm
தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் மூன்று நிறுவனங்களுக்கு நீரா பானம் உற்பத்தி உரிமையை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Samayam Tamil neera paanam cm edappadi palanisamy gave permission to 3 companies
நீரா பானம் உற்பத்தி: மூன்று நிறுவனங்களுக்கு முதல்வர் அனுமதி!!


நீரா பானத்திலிருந்து, நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லெட்கள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் தமிழக அரசு வழி வகை செய்துள்ளது.

மேலும், மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய முடியும்.

இதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு நீரா பானம் உற்பத்தி செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யாவும் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உரிமங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வழங்கினார்.

அடுத்த செய்தி