ஆப்நகரம்

NEET: 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்: செங்கோட்டையன்

தமிழகத்தில் இன்று மாலை முதல் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Sep 2018, 12:27 pm
தமிழகத்தில் இன்று மாலை முதல் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
Samayam Tamil 135010-132916-023565


நீட் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இலவச நீட் தேர்வு பயிற்சியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி தமிழகம் முழுவதும் 412 மையங்களில் இன்று முதல் நீட் தேர்வு பயிற்சி தொடங்கும் எனவும் சுமார் 3200 ஆசிரியர்கள் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் இருந்து இனி எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருந்தாலும் அவர்கள் வேறு மாநிலத்திற்குச் சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படாது” எனவும் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.

அடுத்த செய்தி