ஆப்நகரம்

சுபஸ்ரீ மரணம் தற்கொலை அல்ல, கல்விக் கொலை- ஸ்டாலின்!

கல்வி சார்ந்து ஏற்படும் மன உளைச்சல் காரணமாக மாநிலத்தில் மாணவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்...

Samayam Tamil 19 Aug 2020, 9:24 pm
நீட் தேர்வு காரணமாக சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட நிலையில், “இது அரசு செய்த கொலை” எனக் குறிப்பிட்டு திமுகத் தலைவர் ஸ்டாலின் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil சுபஸ்ரீ மரணம் தற்கொலை அல்ல, கல்விக் கொலை- ஸ்டாலின்!
சுபஸ்ரீ மரணம் தற்கொலை அல்ல, கல்விக் கொலை- ஸ்டாலின்!


நீட் தேர்வு அச்சம் காரணமாகக் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்கள் சுபஸ்ரீ மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது, அதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தி, அதில் தோற்றுப் போய் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அனிதாவைத் தொடங்கி திருச்சி, கோவை என இப்போதும் நீட் காரணமாக மாணவர் தற்கொலைகள் நடந்து கொண்டேதான் உள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி திமுக தலைவர் ஸ்டாலின், “நீட் தேர்வு என அரசு செய்யும் கொலைகள்தான் அனிதா, சுபஸ்ரீ போன்றவர்களின் மரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

போலீசுக்கே இந்த நிலையா, வெடிகுண்டு கூட்டாளியை பிடிங்க- கேப்டன் கோரிக்கை!

ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை அனிதாவில் தொடங்கி இப்போது சுபஸ்ரீ வரை வந்துள்ளது. இவையெல்லாம் அரசு செய்யும் கல்வி கொலை.

சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். சுபஸ்ரீ மரணத்திற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் நலனில் அக்கரையில்லாமல் மத்திய அரசு நீட்த் தேர்வை நடத்துகிறது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு கைக்கட்டி நிற்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி