ஆப்நகரம்

நீட் ஆள்மாறாட்டம்: இர்ஃபான் சீட்டை கிழித்த கல்லூரி நிர்வாகம்!

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கியுள்ள மாணவர் இர்ஃபான் தர்மபுரி மருத்துவக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 2 Oct 2019, 11:07 am
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அடிப்படையில் கேரள இடைத் தரகர் ஜார்ஜ் ஜோசப் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மானவர் பிரவீனும் அவரது தந்தை சரவணனும் கைது செய்யப்பட்டனர். அதேபோல் காட்டான்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவர், அவரது தந்தை டேவிட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Untitled collage (2)


தருமபுரியில் முகமது இர்ஃபான் என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் இர்ஃபானை கைது செய்ய முயற்சி செய்தனர். அவர் மொரிசியஸ் நாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், நீட் தேர்வில் இர்ஃபான் ஆள்மாறாட்டம் செய்வதற்கு மூளையாக செயல்பட்ட, அவருடைய தந்தை சபீயை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

மேலும் மாணவர் இர்ஃபான் நேற்று சேலம் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை அக்டோபர் 9ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து மாணவர் இர்ஃபானை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜலு இர்ஃபானை கல்லூரியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி