ஆப்நகரம்

இன்று ‘நீட்’ தேர்வு டாக்டர். அனிதாவின் பிறந்தநாள்

மருத்துவம் படிக்கும் கனவுகளோடு பிளஸ் டூ படிப்பில், 1176 மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பிறந்தநாள் அன்று, அவரை பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

TNN 5 Mar 2018, 5:59 am
அரியலூர் மாவட்டத்தில் 2000ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பிறந்த அனிதா, மருத்துவம் படித்து சேவை செய்வதே இலக்கு என்ற கனவுகளோடு பள்ளி படிப்பு படித்து வந்தார்.
Samayam Tamil neet protest student anitha birthday today
இன்று ‘நீட்’ தேர்வு டாக்டர். அனிதாவின் பிறந்தநாள்


தனது தந்தை சுமைதூக்கும் கூலி தொழிலாளி என்ற போதிலும், கல்வியில் சிறந்து விளங்கிய அனிதா, பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அதிக மதிப்பெண் பெற்ற நிலையில், மருத்துவம் படிக்கும் கனவுகளும் மேலோங்கியது.


இதனிடையே நாடு முழுவதும் ஒரே மதிப்பெண் முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்ற அடிப்படையில், நீட் (NEET) தேர்வை மத்திய அரசு யோசித்தது. ஆனால், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

ஆனால் நீட் தேர் அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று நீட் தேர்வுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வலியுறுத்தினார்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட்தேர்வு அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. தமிழக பாடத்திட்டத்துக்கும் நீட் தேர்வு பாடத்திட்டத்துக்கும் பெரிய அளவிலான மாறுபாடு இருந்ததால், தமிழக ஏழை, கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மருத்துவ படிப்புக்காக இதுவரை நான் படித்து எடுத்த மதிப்பெண்ணுக்கு எந்த வித பயனும் இல்லை என்று கனவு கலைந்த துக்கத்தில், செப்டம்பர் 1ம் தேதி மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வால் மதிப்பெண் பெற முடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

அடுத்த செய்தி