ஆப்நகரம்

பேச்சுவார்த்தை தோல்வி..! போராட்டத்தை கைவிடாத அரசு மருத்துவர்கள்..

தமிழகத்தில் போராட்டத்தை நடத்தி வந்த மருத்துவருடன் தமிழக அரசு நடத்திய பேசுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 2:26 pm
ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் நடந்து வரும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மருத்துவமனைகளில் அசாதார சூழல் நிலவி வருகிறது.
Samayam Tamil 22


கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று, அரசு மருத்துவர்களால் சேர்ந்த குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதில் அனைத்து மாநிலங்களை போன்று தமிழக அரசு மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை மற்றும் ஊதிய தொகையை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மருத்துவர்கள் போராட்டத்துக்கு செவிசாய்க்குமா தமிழ்நாடு அரசு?

அந்த கோரிக்கை மனுவில், மேற்கண்ட கோரிக்கைகளும் சேர்த்து மருத்துவர்களின் பணி அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்குதல், நோயாளிகளின் வருகைக்கு ஏற்றவாறு மருத்துவர்களை நியமிப்பது, 50 சதவீத இடஒதுக்கீடு, பட்டமேற்படிப்புக்கான முறையான கலந்தாய்வு நடத்த வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோரிக்கைகளை நிறைவேற்ற 6 வார கால அவகாசம் கேட்ட தமிழக அரசு, தற்போது வரை தாமதப்படுத்தி வருவதாக, மருத்துவர்கள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட சூழல் நிலவி வருகிறது.

நவம்பர் 1ஆம் தேதி இனி தமிழ்நாடு நாள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

போராட்டத்தை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு
இன்று மருத்துவர்கள் குழுவிற்கு அழைப்பு விடுத்தது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால் மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

காரைக்காலை மிரட்டும் டெங்கு; 1000க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அவதி!

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதால், இந்த நாளில் மருத்துவர்களின் சேவை மிக முக்கியம். மேலும் சீனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், உள் நோயாளிகளுக்கு பயிற்சி மருத்துவர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி