ஆப்நகரம்

நெல்லையில் பட்டாசு வெடித்த 6 பேர் கைது!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, பட்டாசு வெடித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 6 Nov 2018, 12:55 pm
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, பட்டாசு வெடித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil firecrackers13


நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இன்று தீபாவளியை முன்னிட்டு, காலை 7 மணியளவில், இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்ததால் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்.

தீபாவளி திருநாளில் இப்படி ஒரு கைதுநடவடிக்கை அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் உள்ள ஒரு கிராமத்தில்இந்த சமப்வம் நடைபெற்றுள்ளது. மேலும் அங்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி