ஆப்நகரம்

ரத யாத்திரை வருகையால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

ராம ராஜ்ய ரதயாத்திரை வருகைக்காக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 23ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2018, 10:09 pm
ராம ராஜ்ய ரதயாத்திரை வருகைக்காக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 23ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Vishwa Hindu Parishath


விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சாா்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து நாளை காலை தமிழகம் வருகிறது. கேரள மாநிலம் புனலூாில் இருந்து புளியரை, செங்கோட்டை வழியாக தமிழகத்திற்கு நாளை காலை ரத யாத்திரை வருகின்றது.

மேலும் ரத யாத்திரைக்கு புளியரை பகுதியில் வைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடா்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா் வழியாக நாளை பிற்பகல் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகின்றது.

ரத யாத்திரை தொடா்ந்து நாளை மதுரை வழியாக 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. இந்த ரத யாத்திரைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சியினரும் கடும் எதிா்ப்பு தொிவித்துள்ளனா். மேலும் தழகத்திற்குள் யாத்திரை நுழையும் பகுதியான செங்கோட்டையில் யாத்திரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவும் பல்வேறு அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதுதம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி வருகிற 23ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூாி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா். மேலும் யாத்திரைக்கு பல அமைப்பினா் எதிா்ப்பு தொிவித்துள்ளதால் யாத்திரை செல்லும் வழியெங்கும் பலத்த காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி