நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல், செந்தாமரை என்ற முதிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இதனால் இருவர் மட்டும் தங்கள் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்தனர். அப்போது சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளனர்.
Also Read: நெல்லை வீரத் தம்பதிக்கு கெத்து ’சல்யூட்’ - நேரில் சந்தித்து போலீஸ் சூப்பிரண்டு செய்த செயல்!
இவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி செந்தாமரை ஓடி வந்தார். நிலைமையை உணர்ந்து கொண்டு, உடனே அருகில் இருந்த நாற்காலிகளை தூக்கி கொள்ளையர்கள் மீது வீசினார். அதற்குள் மற்றொரு கொள்ளையன் உள்ளே வந்துள்ளான்.
இரண்டு கொள்ளையர்களும் தங்கள் கைகளில் அரிவாள் வைத்திருந்தனர். ஆனால் அதைக் கண்டு சிறிதும் அச்சமடையாமல், முதிய தம்பதி வீரத்துடன் சண்டையிட்டனர். இருவரும் மாறி, மாறி நாற்காலிகள், காலணிகள் உள்ளிட்டவற்றை தூக்கி வீசினர்.
Also Read: நெல்லை வீரத் தம்பதிக்கு கெத்து ’சல்யூட்’ - நேரில் சந்தித்து போலீஸ் சூப்பிரண்டு செய்த செயல்!
அருகில் சென்று கொள்ளையர்களின் அரிவாளை பிடுங்கி, அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். முதிய தம்பதிகளின் எதிர்ப்பில் தாக்குப் பிடிக்க முடியாமல் கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதில் செந்தாமரைக்கு காயங்கள் ஏற்பட்டன. இந்த கொள்ளை முயற்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் நேரில் சென்று, முதிய தம்பதிகள் இருவரையும் பாராட்டினார்.
Also Read: இறந்து போன தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்; அதிர்ச்சி தரும் பின்னணி!
இந்நிலையில் கொள்ளையர்களுடன் வீரத்துடன் சண்டையிட்ட நெல்லை முதிய தம்பதிக்கு வீரதீர விருது வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இதனால் தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் இருவர் மட்டும் தங்கள் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்தனர். அப்போது சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளனர்.
Also Read: நெல்லை வீரத் தம்பதிக்கு கெத்து ’சல்யூட்’ - நேரில் சந்தித்து போலீஸ் சூப்பிரண்டு செய்த செயல்!
இவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி செந்தாமரை ஓடி வந்தார். நிலைமையை உணர்ந்து கொண்டு, உடனே அருகில் இருந்த நாற்காலிகளை தூக்கி கொள்ளையர்கள் மீது வீசினார். அதற்குள் மற்றொரு கொள்ளையன் உள்ளே வந்துள்ளான்.
இரண்டு கொள்ளையர்களும் தங்கள் கைகளில் அரிவாள் வைத்திருந்தனர். ஆனால் அதைக் கண்டு சிறிதும் அச்சமடையாமல், முதிய தம்பதி வீரத்துடன் சண்டையிட்டனர். இருவரும் மாறி, மாறி நாற்காலிகள், காலணிகள் உள்ளிட்டவற்றை தூக்கி வீசினர்.
Also Read: நெல்லை வீரத் தம்பதிக்கு கெத்து ’சல்யூட்’ - நேரில் சந்தித்து போலீஸ் சூப்பிரண்டு செய்த செயல்!
அருகில் சென்று கொள்ளையர்களின் அரிவாளை பிடுங்கி, அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். முதிய தம்பதிகளின் எதிர்ப்பில் தாக்குப் பிடிக்க முடியாமல் கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதில் செந்தாமரைக்கு காயங்கள் ஏற்பட்டன. இந்த கொள்ளை முயற்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் நேரில் சென்று, முதிய தம்பதிகள் இருவரையும் பாராட்டினார்.
Also Read: இறந்து போன தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்; அதிர்ச்சி தரும் பின்னணி!
இந்நிலையில் கொள்ளையர்களுடன் வீரத்துடன் சண்டையிட்ட நெல்லை முதிய தம்பதிக்கு வீரதீர விருது வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இதனால் தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.