ஆப்நகரம்

விடுதலையான 7 பேரையும் நாடு கடத்த வேண்டும் - காங்கிரஸ் உக்கிரம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான ஏழு குற்றவாளிகளையும் நாடு கடத்தக்கோரி நெல்லை காங்கிரஸ் போராட்டம்.

Samayam Tamil 13 Nov 2022, 3:14 pm
விடுதலை செய்யப்பட்ட ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் நாடு கடத்த வலியுறுத்தி நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திடீர் போராட்டம் நடத்தப்பட்டது. கொடும்பாவி எரிக்க போவதாக அறிவித்ததை தொடர்ந்து போலீஸ் குவிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil rajiv gandhi case


உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஆறு பேர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டனர் ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். மொத்தமாக இந்த வழக்கில் உள்ள ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும் முன்னாள் பிரதமரை கொலை செய்த குற்றத்தில் ஈடுபட்டு விடுதலை செய்யப்பட்ட ஏழு பேரையும் நாடு கடத்த வேண்டும், விடுதலையானவர்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை ஒட்டி வரவேற்பு அளித்த நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீர் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் போது கொடும்பாவி எரிக்கப் போவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் திடீர் சோதனையிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி