ஆப்நகரம்

நெல்லை கண்ணன் பேசியது தவறு: வைகோ

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக நெல்லை கண்ணன் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Samayam Tamil 1 Jan 2020, 7:17 pm
சென்னை: நெல்லை கண்ணன் பேசியது தவறு என மதிமுக பொதுச்செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil வைகோ
வைகோ


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நெல்லைக் கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, உடல்நலக் குறைவால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லைக் கண்ணன் பேச்சு அறச்சீற்றமே..! அவர் தனிநபரல்ல - கொந்தளிக்கும் சீமான்

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது. ஆனால், தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் நோக்கத்தில் அவர் பேசியிருக்க மாட்டார் என்றார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு கடுமையாக எழுந்துள்ளது. இதனை பாஜக எதிர்பார்த்திருக்காது எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி