ஆப்நகரம்

ஈரோட்டில் பரபரப்பு - கணக்கு கேட்ட சங்க உறுப்பினர்; அதுக்கு இப்படியொரு விஷயத்தை பண்ணலாமா!

நேதாஜி மார்க்கெட் சங்கத்தில் கணக்கு கேட்டு சங்க உறுப்பினரை அடித்த உதைத்து கொலை மிரட்டல் விடுத்த சங்க தலைவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 May 2019, 6:21 pm
ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1000 சந்தா என நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Erode_nethaji_maarket


இந்நிலையில் இன்று மார்க்கெட் சங்கத் தலைவர் பி.பி.கே பழனிச்சாமி தலைமையில் சங்கத்தின் கணக்கு வரவு செலவு கூட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் உறுப்பினரான தக்காளி கமிஷன் கண்டியைச் சேர்ந்த பி.ஆர்‌.தர்மபுரியான் என்பவர் கடந்த 15 ஆண்டு வரவு செலவு கணக்கை கேட்டுள்ளார். அப்போது சங்கத்தின் தலைவர் மகன்களான மணிகண்டன், வினோத் ஆகிய இருவருடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்டோர் மிரட்டியுள்ளனர். மேலும் அவரை அடித்து, உதைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர் தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் பேட்டியளிக்கையில், ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் கடந்த 15 ஆண்டுகளாக ரூ.20 கோடி வரை சந்தா தொகையை தலைவர் மற்றும் ஐந்து நிர்வாகிகள் மோசடி செய்து விட்டதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி