ஆப்நகரம்

'ஆருயிர் அண்ணன் உதயநிதி'... தம்பியாக மாறிய அமைச்சர் சேகர் பாபு..

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அண்ணன் என்று கூறி பாராட்டிய சேகர் பாபுவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Samayam Tamil 5 Jan 2023, 2:11 pm
தமிழ்நாட்டில் சில நாட்களாக வாரிசு என்ற வார்த்தை அரசியலிலும், சினிமாவிலும் பயங்கர டிரெண்ட் ஆகி வருகிரது. திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று கூறிய ஸ்டாலின் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை எதிர் கட்சிகளும் அதன் வாக்காளர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Samayam Tamil udhayanidhi stalin


இது போதாது என்று , திமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் ஒவ்வொரு நாளும் விமர்சனத்துக்கு கண்டெட் கொடுத்து வருகின்றனர். என்னதான் உதயநிதி ஸ்டாலின் நாளைய முதல்வர் வேட்பாளர் என்றாலும் மூத்த தலைவர்கள் இப்படியா பம்முவது என்று எதிர்க்கட்சி தலைவர்களும் வேதனை படும் அளவுக்கு தினம்தினம் சம்பவங்கள் நடக்கின்றன.

அண்மையில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உதயநிதியை வரவேற்று பேசியது வைரலாகி வருகிறது. அமைச்சர் சேகர் பாபு பேசும்போது, தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்டங்களிலும் பேராசிரியர் அன்பழகன் புகழ் ஓங்க வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 13 நிகழ்ச்சிகள் என்று வரையறுக்கப்பட்டு இன்று 7 ஆவது நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்வுக்கு தமிழகத்தின் போர் வீரனாக வளம் வந்துகொண்டிருக்கிற எங்கள் ஆருயிர் அண்ணன் உதயநிதியை வரவேற்கிறோம் என்று சேகர் பாபு பேசினார். வாய் தவறி வந்ததாக கூட அவர் அந்த பேச்சில் இருந்து பின்வாங்காததும், அதை கவனிக்காதவாறு உதயநிதி ஸ்டாலின் சிரித்துக்கொண்டே சேகர் பாபுவை பார்த்ததும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

சேகர் பாபுவின் அரசியல் அனுபவம்தான் உதயநிதியின் வயது; ஆனால், இப்படியா மேடையில் முட்டுக்கொடுப்பது என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். மேலும், இதுகூட பரவாயில்லை, உதயநிதியை அருகில் வைத்துக்கொண்டு இப்படி பேசுகிறார்கள்; ஆனால், எங்கோ வெளிநாட்டில் இருக்கும் இன்பநிதியை சின்ன ஜமீன்தாரர் என்றும் அவரை அடுத்த முதல்வராக பார்த்துவிட்டு செத்து விடலாம் என்று முன்னாள் எம்எல்ஏ வி.பி. ராஜன் பேசியதை விடவா என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி