ஆப்நகரம்

'எங்களுக்கும் சில ரைட்ஸ் இருக்கு'.. அது சரி, 'உங்களுக்கு வேலூரில் என்ன வேலை..?' இது தேவையா..!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமிழக விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 8 May 2023, 4:23 pm
புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை சில நாட்களாக திடீர் திடீரென டென்சன் ஆகி விடுகிறார். எப்போதும் சாந்தமாக இருக்கும் அவர் திருமாவளவன், திராவிடம் என்ற பெயர்களை கேட்டால் டென்ஷன் ஆகிவிடுகிறார். வழக்கமாக எச். ராஜாதான் அப்படி இருப்பார்.
Samayam Tamil tamilisai soundararajan
file pic


தமிழகத்தில் மனுதர்மத்தை தூக்கி பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து கருத்து தெரிவித்து வரும் ஆளுநர் ரவிக்கு அரசு எதிர்வினையாற்றினால் எதிர்க்கட்சி தலைவரை போல வெளிநடப்பு செய்கிறார். இவருக்கு சப்போர்ட்டாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்டர் தாண்டுவது
இன்னும் வேடிக்கையாக உள்ளது.

'ஆளுநர் ரவியாரே... பாஜகவின் பிரதிநிதியாக இருக்காமல் மக்கள் பணிக்காக தமிழக அரசுடன் சேர்ந்து பயணியுங்கள் என்று திமுகவை விரும்பாத கட்சிகள்கூட அவருக்கு அறிவுரை செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தமிழக ஆளுநர் எல்லை தாண்டினாலே இங்கு எதிர்ப்புகள் கிளம்பும் நிலையில், சம்மந்தமே இல்லாத வேறு மாநில ஆளுநர் இங்குள்ள அரசியலை குறித்து அதுவும் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது ஆரோக்கியமான விஷயம் இல்லை.

இதே தமிழிசை சௌந்தரராஜன் சில நாட்களுக்கு முன்பு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய விசிக எம்பி திருமாவளவனை கடுமையாக கண்டித்தார். அப்போது அவர், விழுப்புரம் எம்பி-க்கு புதுச்சேரியில் என்ன வேலை? வேண்டுமானால் அவர் தமிழகத்தில் விளம்பரம் தேடிக்கொள்ளட்டும் என்றார். தனக்கு ஒன்று என்றால் பிரித்து பேசும் தமிழிசை சௌந்தரராஜன் திமுக - பாஜக சண்டை என்றால் மட்டும் பார்டர் தாண்டலாமா என்ற கேள்வி எழுகிறது.


இதற்கு பதிலடி கொடுத்த திருமாவளவன் ' அப்போ குஜராத்தை சேர்ந்த மோடிக்கு கர்நாடகாவில் என்ன வேலை என்று கேட்க முடியுமா? குஜராத்தில் பிறந்துவிட்டு எதற்காக அவர் உ.பி.யில் போட்டியிடுகிறார் என்று கேட்கவா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் குழப்பமான கருத்தை தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரங்கள் இருப்பதைப்போல், ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் உள்ளது; ஆளுநர்களை மரியாதை குறைவாக மற்றவர்கள் பேச கூடாது'' என்று மீண்டும் தமிழ்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்துள்ளார். இதனை விமர்சிக்கும் நெட்டிசன்கள், ' அது சரி, புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு வேலூரில் என்ன வேலை'? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் கேட்ட கேள்வியே அவருக்கு 'பேக் பயர்' ஆகியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி