தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.
விசாரணை கமிஷன் தொடங்கப்பட்ட போது, 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடபட்டிருந்தது. ஆனால், கிட்டத்தட்ட 39 மாதங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் இன்னமும் விசாரணை கமிஷனின் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதே சமயம் ஆணையத்தின் விசாரணைக்கான கால அவகாசம் மட்டும் நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது.
அந்த வகையில், ஜனவரி 24ஆம் தேதியுடன் விசாரணை கமிஷனின் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஆறுமுகசாமி ஆனையத்தின் கால அவகாசம் 10ஆவது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆணையம் அமைக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஆஜராக வேண்டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அவர் ஆஜராகவில்லை.
ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் - கரூரில் ராகுல் காந்தி அறிவிப்பு
சிறு பெட்டிகேஸில்கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார். அப்படி ஜெயலலிதா மரணத்துக்கு நீதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன என்று தெரியவில்லை. ஆணையமும் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை என்பதும் தெரியவில்லை.
இவை அனைத்தையும் சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள் ஆறுமுகசாமி ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்பட்டனர், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், அரசு ஊழியர்களுக்கு மட்டும் முழு ஊதியம் வழங்கப்பட்டது.
அந்த வகையில், ஆறுமுகசாமி ஆணைய ஊழியர்கள் இந்த பேரிடர் காலத்தில் எந்த வேலையும் இல்லாமல் முழு ஊதியம் பெற்று வருகின்றனர். அதற்காக மக்களின் வரிப்பணத்தை அரசு செலவிட்டு வருகிறது என்று சாடும் இணையதள வாசிகள், யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்துவதற்காக ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையடுத்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.
விசாரணை கமிஷன் தொடங்கப்பட்ட போது, 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடபட்டிருந்தது. ஆனால், கிட்டத்தட்ட 39 மாதங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் இன்னமும் விசாரணை கமிஷனின் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதே சமயம் ஆணையத்தின் விசாரணைக்கான கால அவகாசம் மட்டும் நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது.
அந்த வகையில், ஜனவரி 24ஆம் தேதியுடன் விசாரணை கமிஷனின் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஆறுமுகசாமி ஆனையத்தின் கால அவகாசம் 10ஆவது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆணையம் அமைக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஆஜராக வேண்டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அவர் ஆஜராகவில்லை.
ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் - கரூரில் ராகுல் காந்தி அறிவிப்பு
சிறு பெட்டிகேஸில்கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார். அப்படி ஜெயலலிதா மரணத்துக்கு நீதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன என்று தெரியவில்லை. ஆணையமும் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை என்பதும் தெரியவில்லை.
இவை அனைத்தையும் சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள் ஆறுமுகசாமி ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்பட்டனர், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், அரசு ஊழியர்களுக்கு மட்டும் முழு ஊதியம் வழங்கப்பட்டது.
அந்த வகையில், ஆறுமுகசாமி ஆணைய ஊழியர்கள் இந்த பேரிடர் காலத்தில் எந்த வேலையும் இல்லாமல் முழு ஊதியம் பெற்று வருகின்றனர். அதற்காக மக்களின் வரிப்பணத்தை அரசு செலவிட்டு வருகிறது என்று சாடும் இணையதள வாசிகள், யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்துவதற்காக ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.