ஆப்நகரம்

சுயமரியாதைக்கு களங்கம்? வாயை திறக்காத முதல்வர்... அப்செட்டில் அமைச்சர்கள்..!

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிப்பாமல் இருப்பதால் அமைச்சர்கள் அப்செட்டில் உள்ளதாக தகவல்

Samayam Tamil 14 Aug 2022, 11:37 am
மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி புறப்பட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் பூதாகரமாகியுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ''என் கார் மீது வீசப்பட்ட 'பழைய ஏர்போர்ட் டெர்மினலின் சின்ட்ரெல்லாவின் செருப்பு' திரும்ப பெற விரும்பினால் உங்களுக்காக எனது ஊழியர்கள் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளனர்'' என கூறியுள்ளார்.
Samayam Tamil ptr car slipper hurled


நாட்டில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடவுள்ள நிலையில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதனை பாஜக தொண்டர்கள் பின்பற்றி வரும் சூழலில், சம்பவத்தன்று தேசிய கொடியுடன் வந்த அமைச்சரின் காரில் பாஜக தொண்டர்கள் செருப்பு வீசியிருப்பது அவர்களுக்கே பேக் ஃபயர் ஆகியுள்ளது. அதுபோல, தனது அரசின் அமைச்சரவையின் உறுப்பினர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசியதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் மவுனம் காத்து வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ''தனது கேபினட் அமைச்சர்களின் சுயமரியாதையை முதல்வர் மதிக்கிறாரா? அவர் அப்படிச் செய்திருந்தால், இச்சம்பவத்தில் சில அதிரடி நடவடிக்கைகளைப் பார்த்திருப்போம்'' என விமர்சித்துள்ளனர்

சுயமரியாதையில் சமரசம் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த தலைவர்களின் கட்சியில் முதல்வராக இருக்கும் முக ஸ்டாலின் தனது அமைச்சருக்கு ஏற்பட்ட சம்பவத்தை குறித்து எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பதால் கட்சியின் அமைச்சர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு ஆதரவாக மற்ற அமைச்சர்களும் இதுகுறித்து வாய் திறக்க முடியாமல் உள்ளனராம்.

போலீஸ் இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்? பிடிஆர் கார் மீது ஆவேசமாக பாய்ந்த பாஜக கும்பல்

மேலும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்கூட இதனை கடந்து செல்வதை போல ட்வீட் போட்டிருப்பது தொண்டர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுளளது. இந்நிலையில், அரசியல்வாதிகள் வேண்டுமானால் அலட்சியமாக இருக்கலாம் ஆனால், கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் பாஜகவினரை சமூக வலைத்தளங்களில் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


அண்ணாமலையை குறித்து போட்டு வரும் ஹாஷ்டேக் ஒன்று டிவிட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி