ஆப்நகரம்

தாமிரபரணி நதியை காக்க களமிறங்கும் நெட்டிசன்கள் #SaveThamirabarani

தாமிரபரணி நதியை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்ற நெல்லையைச் சார்ந்த நெட்டிசன்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை விரைவில் துவங்க இருக்கின்றனர்.

TNN 28 Jan 2017, 10:35 am
நெல்லை : தாமிரபரணி நதியை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்ற நெல்லையைச் சார்ந்த நெட்டிசன்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை விரைவில் துவங்க இருக்கின்றனர்.
Samayam Tamil netizion plan to save thamirabarani
தாமிரபரணி நதியை காக்க களமிறங்கும் நெட்டிசன்கள் #SaveThamirabarani


தென் தமிழகத்தின் முக்கிய நதியாகவும் , வற்றாத நதியாகவும் தாமிரபரணி நதி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட்ட தென் மாநில மக்களின் விவசாய தேவைக்கான தண்ணீரையும், குடி தண்ணீர் தேவையையும் இந்த நதிதான் பூர்த்தி செய்துவருகிறது.

நதியை சுற்றியுள்ள கருவேல மரங்களாலும், தொழில் நிறுவனங்களுக்கு லட்சம் லிட்டர் கணக்கில் வழங்கப்படும் நீராலும் , மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தாமிரபரணி நதியானது அழிவுநிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அதனை பாதுகாக்கவேண்டும் என்று சமூகவலைதளங்களில் #SaveThamirabarani என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். .

இந்தநிலையில் பிரபல சமுக வலைதளமான பேஸ்புக்கில் "பேன் ஆப் திருநெல்வேலி" என்ற பக்கம் உள்ளது. இந்த பக்கத்தை ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்த பக்கத்தில் , " தாமிரபரணி நதிக்கரையில் உள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் ஆற்றில் படர்ந்துள்ள அமலை செடிகளையும் அகற்றி அந்த இடந்தில் பனை விதைகளை விதைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம்
விரைவில் ஒரு விடுமுறை தினத்தில் இப்பணியை தொடங்குவோம் அனைவரும் தயாராகுங்கள்..!" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூக வலைதளம் மூலமாக இணைந்த நெட்டிசன் கள் தற்போது தாமிரபரணி நதியை காக்க களமிறங்க இருக்கின்றனர்.

அடுத்த செய்தி