ஆப்நகரம்

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை: உண்மையை உடைத்த அதிகாரி...!

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை என்று திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

TNN 15 Jun 2017, 1:11 pm
சென்னை: தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை என்று திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil neutrino plan not stopped in tamilnadu
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை: உண்மையை உடைத்த அதிகாரி...!


கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்து, தேனி மாவட்டம் போடி மேற்கு மலைப்பகுதியில் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக அப்பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் நில ஒதுக்கீட்டில் தாமதம் தொடர்ந்து வருகிறது. அதன் காரணமாக நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அதன் திட்ட அதிகாரி விவேக் தாடரிடம் கேட்கப்பட்டது.

அப்போது அவர், தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை என்றும், தமிழக அரசு அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அனுமதி குறித்து தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றும் திட்ட அதிகாரி குறிப்பிட்டார். தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை அடுத்து, சுற்றுச்சூழல் அனுமதிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.

Neutrino Plan not stopped in Tamilnadu.

அடுத்த செய்தி