ஆப்நகரம்

மீண்டும் துளிர் விடும் அமமுக கட்சி.! 19 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார் டி.டி.வி..

கட்சியில் காலியாக இருந்த மாவட்ட செயலாளர்கள் இடத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.

Samayam Tamil 1 Sep 2019, 3:23 pm
தினகரன் கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தின் பெரிய மூன்றாவது கட்சியின் பட்டியலில் ஒப்பிடும் அளவிற்கு இருந்தது. தேமுதிக, நாம் தமிழர், பாமக போன்ற நீண்ட கால கட்சியின் வரிசையில் விரைவாகவே இடம் பெற்றது. அதன் பின்னர் தினகரன் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் நின்று சட்ட மன்ற உறுப்பினரானார்.
Samayam Tamil 8



லண்டனில் எடப்பாடியாரை பாதுகாக்கும் ஜெயலலிதா பாதுகாவலர்!!

இதற்கிடையில் அமமுக-வில் கட்சி தாவல் ஏற்பட்டு தொடர்ச்சியாக நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு வெளியேறினர். இது கட்சிக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் தினகரன் மனதளவில் நெருக்கடியை சந்தித்தகாக தகவல்கள் வெளியாயின.

தற்போது கட்சியில் காலியாக இருந்த 19 மாவட்ட செயலாளர்களின் இடத்தை மீண்டும் நிரப்பியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளை மாவட்ட வாரியாக பாப்போம்.

விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்


திருவள்ளூர் மேற்கு மாவட்டம் : ஏழுமலை, தென் சென்னை தெற்கு மாவட்டம்: விருகை கண்ணன், தேனி மாவட்டம்: முத்துச்சாமி, திருவள்ளூர் கிழக்கு: பொன்ராஜா, திருவள்ளூர் தெற்கு மாவட்டம்: லக்கி முருகன், திருவள்ளூர் மத்திய மாவட்டம்: மலைமேகமும்

நெல்லை வடக்கு: சோ. மாரியப்பன், நெல்லை மாநகர்; பரமசிவ ஐயப்பன் ஆகிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமமுக-வின் அமைப்புச் செயலாளராக பால்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி