ஆப்நகரம்

தோண்டத் தோண்ட கிடைக்கும் நகை பெட்டகம்

சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளிலில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொண்ட பெட்டம் தோண்ட தோண்டக் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 11 Jul 2017, 5:55 pm
சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளிலில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொண்ட பெட்டம் தோண்ட தோண்டக் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil new box with gold taken from chennai silks building
தோண்டத் தோண்ட கிடைக்கும் நகை பெட்டகம்


ஜீன் மாதம் சென்னை சில்க்ஸ் கட்டத்தில் பற்றிய தீயினால் 2000 கிலோ வெள்ளி உட்பட ரூ. 300 கோடி வரை சேதம் ஏற்பட்டதோடு, சென்னை நகரத்தின் அடிப்படை கட்டுமானத்தை பற்றிய ஏராளமான கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு நகை பெட்டகம் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் பற்றிய தீயால் ஒட்டுமொத்த சென்னை சில்க்ஸ் கட்டிடமே எரிந்து நாசமானது. சுமர் 36 மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாவிட்டாலும் விலை உயர்ந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்திலிருந்து ஏற்கனவே 2 பெட்டகம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் இன்று ஒரு பெட்டகம் மீட்கப்பட்டுள்ளது. இப்போது மீட்கப்பட்ட பெட்டகத்தில் விலை உயர்ந்த தங்கம் , வெள்ளி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் மீட்கப்பட்ட பெட்டகத்தில் கருகிய நிலையில் பாத்திரங்கள் மீட்கபட்டன. மற்றொரு பெட்டகத்தில் 400 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி மீட்கபட்டது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி