ஆப்நகரம்

ரஜினி, கமல் அரசியல் ரகசியத்தை உடைத்த எடப்பாடி

“ரஜினி, கமல் வயதானவர்கள், வயது முதிர்ந்தவர்கள் 65,66 வயதில் அரசியலுக்கு வருகிறார்கள்... இத்தனை நாட்கள் எங்குச் சென்றிருந்தார்கள்... ” ரஜினி, கமலை விளாசித் தள்ளிய முதல்வர்...

Samayam Tamil 12 Nov 2019, 3:00 pm
தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி சேலத்தில் நிருபர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, அவர் ரஜினி, கமல் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக ரஜினி குறித்த கேள்வி எழுப்பியதற்கு, மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
Samayam Tamil Untitled (3)


இன்று சேலத்தில் முதல்வர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நிருபர் ஒருவர் “கமல் அதிமுக, திமுகவை விமர்சித்து வரும் நிலையில், இப்போது ரஜினியும் அதையே செய்து வருகிறார், இதை எப்படி பார்க்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த முதல்வர்:

வயதாகிவிட்டது, வயது முதிர்ந்துவிட்டது... 65,66 வயதாகிவிட்டது இனித் திரைப்படத்தில் வாய்ப்பில்லை என்பதால், ரஜினி, கமல் போன்றவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இப்போது கட்சி ஆரம்பிக்கும் இவர்கள் இத்தனை நாள் எங்கு சென்றிருந்தார்கள்?

1974இலிருந்து நான் அதிமுகவில் இருந்து வருகிறேன். மக்களுக்காக பாடுபட்டு உழைக்கிறேன். கட்சியில் இணைந்து, மக்கள் பிரச்சினைகள் குறித்து அறிந்து அதன்பின் படிப்படியாக உயர்ந்து வந்தேன். இது 45 ஆண்டுக் கால அரசியல் பயணம். பல போராட்டங்களை மக்களுக்காகச் செய்திருக்கிறேன். சிறைக்குச் சென்றிருக்கிறேன். இப்படி மக்கள் ஆதரவோடு உயர்ந்தேன்.

ரஜினியும், கமலும் என்ன மக்கள் பணி செய்தார்கள்? இத்தனை நாட்கள் திரைப்படத்தில் நடத்தி வருமானம் ஈட்டினார்கள். இப்போதும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்துவிட்டு மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் போல் காண்பித்துக் கொள்கிறார்கள்.

அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?- மு.க.ஸ்டாலின்!

நமக்கு சிவாஜி கணேசனைப் பற்றித் தெரியும், மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு பெற்ற நடிகர், அரசியலில் குதித்த பின் அவர் நிலை என்ன என்பது நமக்குத் தெரியும். எம்ஜிஆருக்குப் பின் மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற நடிகர் சிவாஜி கணேசன்தான். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் சிவாஜி நிலைதான்.

கமல் கட்சி ஒன்றை ஆரம்பித்துவிட்டு, தனது ரசிகர்கள் மட்டும் கட்சிக்குள் வந்தால் போதும் எனப் பணிகளைச் செய்து வருகிறார். கட்சி ஆரம்பித்தவுடன் அவரை தலைவராக்கி விடுகிறார்கள். நான் கேட்கிறேன், கமலுக்கு அடிப்படையில் என்ன தெரியும்? எத்தனை உள்ளாட்சித் தொகுதிகள் இருக்கின்றன என்பது தெரியுமா? அரசியலைப் பற்றி என்னதான் தெரியும்?

கிரண்பேடி கொச்சைப்படுத்துகிறார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றசாட்டு

ரஜினி கட்சி ஆரம்பிக்கக் கூடாது எனச் செல்லவில்லை. அது அவர் ஜனநாயக உரிமை. தொடர்ந்து வெற்றிடம் வெற்றிடம் எனக் கூறிவரும் ரஜினி ஏன் இப்போது நடந்த இடைத்தேர்தலில்கூட போட்டியிடவில்லை? திரைப்படத்தின் மூலம் வருமானத்தை ஈட்டிக்கொண்டு, அரசியலில் நுழைய நடிகர் இருவரும் செயல்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் பழனிசாமியின் இந்தப் பேச்சு அரசியலில் அதிரடி அலைகளைக் கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி