ஆப்நகரம்

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 28 Nov 2016, 1:52 pm
சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil new cyclone depression may cause heavy rainfall in tamilnadu and puducherry
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை மையம் தகவல்


இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், இன்று காலை தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடமேற்கு நோக்கி, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொள்ளும். இதனால் டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும். ஓரிரு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகக் கடற்கரையோரமாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கடலோரப் பகுதிகளிலும், மேலும் ஒரு சில இடங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி