ஆப்நகரம்

புத்தாண்டில் பட்டையக் கிளப்ப வரும் புயல்!

புத்தாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 31 Dec 2017, 2:43 am
சென்னை: புத்தாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil new cyclone likely to hit tamil nadu in new year
புத்தாண்டில் பட்டையக் கிளப்ப வரும் புயல்!


வடகிழக்குப் பருவமழை காலம் டிசம்பருடன் முடியும். ஆனால், மேலும் ஒரு வாரம் பருவமழை நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புத்தாண்டு தினத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸும், அதிகபட்ட வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸூம் இருக்கும்.

அடுத்த செய்தி