ஆப்நகரம்

நாளை மறுநாள் உருவாகிறது புதிய புயல்: தமிழகத்துக்கு ஆபத்தா?

மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை மறுநாள் புயலாக வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Samayam Tamil 31 May 2020, 3:48 pm
வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது. அம்பன் என பெயரிடப்பட்ட இந்த புயலானது மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு மெதினாபூர் மாவட்டம் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளின் சுந்தர்பன் இடையே கடந்த 20ஆம் தேதி கரையை கடந்தது. மேற்குவங்க, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய அம்பன் புயலில் சிக்கி சுமார் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஜூன் 2ஆம் தேதி (நாளை மறுநாள்) புயலாக வலுவடையக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, ஜூன் 5ஆம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள வானிலை ஆய்வு மையம், கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

சைடு கேப்பில் டாஸ்மாக் சரக்கு விற்பனை நேரத்தை கூட்டிய தமிழக அரசு!

அத்துடன், அரபிக்கடல் பகுதியில் உருவாகும் இந்த புயலால் இந்தியாவுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், பருவமழையை தாமதப்படுத்துவதற்கு இது காரணமாக அமையும் என கூறப்படுகிறது.

ஜூன் 1ஆம் தேதி வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால், நடப்பாண்டு ஜூன் 5ஆம் தேதியன்று தாமதமாக தொடங்கும் என தெரிவித்த வானிலை ஆய்வு மையம், தற்போது கேரளாவில் நாளையே தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி