ஆப்நகரம்

தோற்றாலும் மீசையில மண் ஒட்டல...!!

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய பல முக்கிய அதிமுக வேட்பாளர்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

TNN 8 Jun 2016, 12:29 pm
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும்,தேர்தலில் போட்டியிட்ட சில முக்கிய அதிமுக பிரமுகர்கள் தோல்வியடைந்தது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. குறிப்பாக நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா,வளர்மதி,சி.ஆர்.சரஸ்வதி,பண்ருட்டி ராமச்சந்திரன்,பொன்னையன் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்ததால் அவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்பட்டது.
Samayam Tamil new list of admk spokespersons
தோற்றாலும் மீசையில மண் ஒட்டல...!!


ஆனால் இன்று வெளியிடப்பட்ட கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் தோல்வியடைந்த முக்கிய அதிமுக பிரமுகர்கள் பலருக்கும் செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தித்தொடர்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி,வைகைச் செல்வன் ஆகியோரும் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வைத்திய லிங்கம் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர பண்ருட்டி ராமச்சந்திரன்,சி.ஆர்.சரஸ்வதி,சி.பொன்னையன்,ஆவடி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜன், நாஞ்சில் சம்பத்,முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சமரசம் ஆகியோரும் செய்தித் தொடர்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி