ஆப்நகரம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

வடக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 20 Jun 2019, 5:14 pm
வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் உருவாகியள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Chennai Rain


தமிழகம் முழுவதும் தண்ணீா் பஞ்சம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் தென்மேற்கு பருவ மழையை எதிா்நோக்கி தான் உள்ளனா். தென்மேற்கு பருவ மழையால் நமக்கு நேரடியாக மழை கிடைக்காத போதிலும், அண்டை மாநிலங்களில் பொழியும் மழை நம் மாநிலத்தில் உள்ள நீா் தேக்கங்களை வந்தடைகின்றது.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் தென்மேற்கு பருவமழை குறைவாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்திருந்தது.


இந்நிலையில் வடக்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சீரான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முதலில் வடக்கு நோக்கியும், பின்னா் வடமேற்கு திசையை நோக்கியும் நகர வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தொிவித்துள்ளது. இந்த மழை காரணமாக சென்னை உட்பட வட தமிழகத்தில் நிலத்தடி நீா் மட்டம் சீரான அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி