ஆப்நகரம்

பொங்கல் பரிசு 2500 ரூ - மீண்டும் ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு!

பொங்கல் பரிசு, ரொக்கத்தொகை விநியோகம் தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 12 Jan 2021, 12:58 pm
தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2500 ரூபாய் ரொக்கம் ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கி வருகிறது. நாளையுடன் (ஜனவரி 13) இவை நிறைவடைவதாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tn pongal gift cash


இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், “பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கத்தொகையை முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் (ஓ.ஏ.பி.), அன்னபூர்னா திட்ட பயனாளிகள் (ஏ.என்.பி.) ஆகிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும்படி ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
19ஆம் தேதி பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு!
ஓ.ஏ.பி. மற்றும் ஏ.என்.பி. பயனாளிகள் மொத்தம் 4 லட்சத்து 15 ஆயிரத்து 612 பேர் உள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 720 பேருக்கு பொங்கல் பரிசு மற்றும் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 ஆயிரத்து 892 பேருக்கு அவை வழங்கப்படவில்லை.

எனவே இந்த பயனாளிகளுக்கு ஏற்கனவே அவர்கள் வைத்துள்ள அடையாள அட்டையின் அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

பித்தளை பானையுடன் பொங்கல் பரிசு: அமைச்சர் விநியோகம்!
அச்சிடப்பட்ட புதிய மின்னணு அட்டை இல்லை என்று காரணம் காட்டி ஓ.ஏ.பி. மற்றும் ஏ.என்.பி. பயனாளிகளை, பொங்கல் பரிசு மற்றும் தொகை வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. ஏற்கனவே அச்சிடப்பட்டு, பொங்கல் பரிசு மற்றும் தொகை வழங்கப்படாமல் இருக்கும் ஓ.ஏ.பி. மற்றும் ஏ.என்.பி. ரேஷன் அட்டைதாரர்களுக்கு காலதாமதமின்றி அவற்றை வழங்க வேண்டும்.
சசிகலா வருகை குறித்து எடப்பாடி கூறியது என்ன?
பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் தொகையை ஜனவரி 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் வினியோகம் செய்யவும், அந்த நாட்களில் அவற்றை பெறாதவர்களுக்கு 13ஆம் தேதியன்று வழங்கவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. யாரும் விடுபட்டுவிடாமல் இருப்பதற்காக 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை (ரேஷன் கடை விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து நாட்களிலும் பொங்கல் பரிசையும், தொகையையும் வழங்க வேண்டும். பொங்கல் துணிப்பையை பெறாதவர்களுக்கு அதை வழங்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி