ஆப்நகரம்

அரசு ஊழியர் ஊதியத்தை மாற்றியமைக்கக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர் ஊதியத்தை மாற்றியமைக்கக் குழு ஒன்றை உருவாக்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

TNN 22 Feb 2017, 1:06 pm
சென்னை: அரசு ஊழியர் ஊதியத்தை மாற்றியமைக்கக் குழு ஒன்றை உருவாக்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil new plan for govt employees says tn cm palanisamy
அரசு ஊழியர் ஊதியத்தை மாற்றியமைக்கக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு


தமிழக அரசின் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசு அலுவலர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க, 5 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஒய்வூதியம் போன்றவை குறித்து குழு ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளரும், பணியாளர், நிர்வாக சீர்திருத்த துறை செயலாளரும் குழுவில் இருப்பர். உறுப்பினர் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ் இருப்பார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

New plan for govt employees says TN CM Palanisamy.

அடுத்த செய்தி