ஆப்நகரம்

இ-சேவை மையம் மூலம் புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதியதாக ஸ்மார்ட் ரேசன் கார்டு பெற விண்ணப்பித்தல், ஸ்மார்ட் ரேசன் கார்டில் தேவையான விவரங்களை திருத்தம் செய்யும் வசதியை வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

TNN 22 Apr 2017, 11:01 am
சென்னை : அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதியதாக ஸ்மார்ட் ரேசன் கார்டு பெற விண்ணப்பித்தல், ஸ்மார்ட் ரேசன் கார்டில் தேவையான விவரங்களை திருத்தம் செய்யும் வசதியை வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
Samayam Tamil new ration card now can be applied through e service centres
இ-சேவை மையம் மூலம் புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையி, "தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்பொழுது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ-சேவை மையங்கள்தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும், இந்த பொது சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்தவேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சேவை மையங்கள் வாயிலாக மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் தங்களது இல்லங்களின் அருகிலேயே பெற்று வருகிறார்கள். இச்சேவை மையங்கள் வாயிலாக கூடுதலான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டி அரசால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 24.4.2017 முதல் அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக புதியதாக குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் நீக்கம், கைபேசி எண் மாற்றம் செய்தல் போன்ற குடும்ப அட்டை தொடர்பான சேவைகள், வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை சம்மந்தமான மேற்படி சேவைகள் பெற்றிட பொதுமக்கள் தங்களது இல்லங்களுக்கு அருகாமையில் உள்ள இசேவை மையங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி