கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு, அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை (Elderly care) போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இபதிவுமுறையயும் (e-Registration) கட்டாயமாக்கியுள்ளது. மேலும், தற்போதுள்ள நடைமுறையின்படி, இபாஸ் கிடையாது, இபதிவு மட்டும் தான் என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது, இணையதளத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து அதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இபதிவு நடைமுறையானது கடந்த 17ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பயணம் மேற்கொள்ள https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதனிடையே, திருமணத்திற்காக இபதிவு விண்ணப்பிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது. திருமணத்திற்காக அதிகம் பேர் விண்ணப்பித்து பயணிக்கின்றனர். இதனால் தற்காலிகமாக இபதிவு இணையதளத்தில் இருந்து திருமணத்தை தேர்வு செய்யும் விவரம் நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இபதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, திருமண நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே இபதிவு முறை போதுமானது. திருமண அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றுள்ள ஒருவர் மட்டும் அனைவருக்கும் சேர்த்து இபதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு இபதிவு செய்ய்யும் அனைவரின் ஆதார், செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இபதிவின் போது திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். போலி திருமண பத்திரிக்கை தயார் செய்தால் நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருமணத்திற்காக இபதிவு விண்ணப்பிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது. திருமணத்திற்காக அதிகம் பேர் விண்ணப்பித்து பயணிக்கின்றனர். இதனால் தற்காலிகமாக இபதிவு இணையதளத்தில் இருந்து திருமணத்தை தேர்வு செய்யும் விவரம் நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இபதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, திருமண நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே இபதிவு முறை போதுமானது. திருமண அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றுள்ள ஒருவர் மட்டும் அனைவருக்கும் சேர்த்து இபதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு இபதிவு செய்ய்யும் அனைவரின் ஆதார், செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இபதிவின் போது திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். போலி திருமண பத்திரிக்கை தயார் செய்தால் நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.