ஆப்நகரம்

கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவச்சிலைகள் திறப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பாக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு, முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 28 Feb 2017, 4:04 pm
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பாக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு, முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil new statues unveiled for jayalalithaa and mgr in krishnagiri
கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவச்சிலைகள் திறப்பு!


சூளகிரி அடுத்த காமநாயக்கன்பேட்டை எனுமிடத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சிலைகளை, இன்று காலை அதிமுக மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பிரபாகரன் தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் அவர்கள் திறந்து வைத்தார்.





இந்நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி ஒன்றிய குழு தலைவர் முனியப்பன், தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன், சோக்காடி ராஜன், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனித்து நிற்கும் வகையிலான உருவச்சிலைகளே, ஒரு சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் இணைந்து நிற்பதைப் போல வைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளால், கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் வியப்படைந்துள்ளனர்.

New statue unveiled for Jayalalithaa and MGR in Krishnagiri.

அடுத்த செய்தி