ஆப்நகரம்

42 ஆண்டுகளுக்கு பின், மதுரை- சென்னை இடையே அதிவேக புதிய ரயில்!

சென்னை: புதிய ’தேஜஸ்’ ரயில் மதுரை - சென்னை இடையே இயக்கப்பட உள்ளது.

Samayam Tamil 4 Jan 2019, 12:00 pm
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு, 20க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil Tejas Train


கடந்த 1977ஆம் ஆண்டு, மதுரையில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக பகல் நேர வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதற்கு முன்பிருந்து இரவு நேரத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இயக்க தென்னக ரயில்வே பயணிகள் நலச் சங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர், எம்.பிக்கள் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மதுரை - சென்னை பகல் நேர ’தேஜஸ்’ அதி விரைவு ரயிலிற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதன் முதல் பயணத்தை பிரதமர் மோடி மதுரையில் இருந்து தொடங்கி வைக்க உள்ளார். வரும் 27ஆம் தேதி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

அப்போது தேஜஸ் ரயிலை கொடியசைத்து மோடி தொடங்கி வைக்கிறார். இதில் மொத்தம் 10 பெட்டிகள் உள்ளன. முதல் 4 எக்ஸிகியூடிவ் பெட்டிகள், சொகுசு வசதிகள், விஐபிக்கள், முக்கிய அதிகாரிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 4 பெட்டிகளில் சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் தலா 48 பேர் வரை பயணம் செய்யலாம். தரமான கேட்டரிங், தானியங்கி கதவுகள், தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.30 க்கு மதுரை சென்றடையும்.

மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு சென்னை சென்றடையும். வியாழக்கிழமை மட்டும் ரயில் சேவை கிடையாது. சுமார் 7 மணி நேரத்தில் சென்னை - மதுரை இடையே ரயில் இயக்கப்படுகிறது. எனவே திருச்சி, விழுப்புரம் ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி