ஆப்நகரம்

கொரோனா 1,019, புதிய தொற்று 10 , பீதியை கிளப்பும் இங்கிலாந்து ரிட்டர்ன்ஸ்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 26 Dec 2020, 8:45 pm
தமிழகத்தில் இன்றைய (26-12-2020) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,019 பேருக்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,13,161 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கு புதிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 9,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 295 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 224094ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 217155பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3988 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51884 ஆக அதிகரித்துள்ளது. 50369 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 645 பேர் பலியாகியுள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 2254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2231 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று இறந்து பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4627 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து நாளை காலை முடிவு - ஹைதராபாத் அப்பல்லோ

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64,075 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,35,58,661 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,098 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,92,063 ஆக அதிகரித்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,059 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி