ஆப்நகரம்

கோவை: போலீசில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!

கோவையில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கேட்டு, போலீசில் தஞ்சமடைந்தனர்.

TNN 31 Aug 2016, 10:03 pm
கோவையில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கேட்டு, போலீசில் தஞ்சமடைந்தனர்.
Samayam Tamil newly married couple seek police protection in coimbatore
கோவை: போலீசில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!


சென்னையை சேர்ந்த லஷ்மி என்ற பிராமணப் பெண், கோவையை சேர்ந்த ஜெயசூர்யா என்ற மாற்று ஜாதி இளைஞரை காதலித்து, தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த காதலுக்கு, லஷ்மியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், சென்னையில் இருந்து வெளியேறிய அவர், கோவையை சேர்ந்த கலப்புத் திருமண ஜோடிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணனிடம் உதவி கோரினார்.

இதன்பேரில், லஷ்மிக்கும், அவரது காதலருக்கும் பதிவுத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவை கமிஷனர் அலுவலகத்தில் இருவரையும் அழைத்துச் சென்று, பாதுகாப்பு வழங்கும்படி, ராமகிருஷ்ணன் மனு வழங்கினார்.

லஷ்மியின் குடும்பத்தினருக்கு, அரசியல் செல்வாக்கு உள்ளதால், அசம்பாவிதம் ஏதேனும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கும்படி போலீசாரிடம் வலியுறுத்தப்பட்டது. இதன்பேரில், உரிய நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதி அளித்தனர்.

அடுத்த செய்தி