ஆப்நகரம்

அடுத்த கட்ட ஊரடங்கு: முதல்வர் அறிவிக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்புகள்?

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

Curated byமரிய தங்கராஜ் | Samayam Tamil 21 Aug 2021, 7:09 am
கொரோனா பரவல் மே மாதம் புதிய உச்சத்தை தொட்டது. அப்போது புதிதாக பொறுப்பேற்றிருந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டியது. தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. ஊரடங்கை மக்கள் முறையாக அப்போது பின்பற்றியதால் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் வேகமாக குறைந்தது.
Samayam Tamil next curfew in tamil nadu what will be allowed what relaxations will be announced
அடுத்த கட்ட ஊரடங்கு: முதல்வர் அறிவிக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்புகள்?


குறையும் கொரோனா!

36 அயிரம் என்ற அளவில் இருந்த பாதிப்பு 60 ஆயிரத்தை எட்ட வாய்ப்பு என கூறப்பட்ட நிலையில் 2000ஆக குறைந்தது. சில வாரங்களுக்கு முன்னர் சில பகுதிகளில் மட்டும் பாதிப்பு லேசாக அதிகரித்த நிலையில் அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு இறங்கு முகத்தில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தினசரி கொரோனா பாதிப்பு 1668ஆக உள்ளது.

புதிய தளர்வுகள்

தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 21) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

பள்ளிகள் திறப்பு!

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கான பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகள் திறப்பு!

பள்ளிகள் திறப்பு: அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறை!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்கைச் சார்ந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கொரோனா குறைந்துள்ளதால் திரையரங்குகளை திறக்க வலியுறுத்தப்பட்டுள்ளதால் முதல்வர் ஸ்டாலின் இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்கிறார்கள். ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி