ஆப்நகரம்

அடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த கட்ட ஊரடங்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்லூரிகள் திறக்கும் தேதியையும் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 1 Dec 2020, 10:22 am
கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட பொதுமுடக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil tn college open


அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட பொது முடக்கம் இன்று (டிசம்பர் 1) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

“*கல்லூரி, பல்கலைக்கழகங்களில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கலை அறிவியல், தொழில்நுட்பம், கால்ண்டை, பொறியியல், வேளாண்மை, மீன் வளம் உள்ளிட்ட அனைத்து இளங்கலை இறுதி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் தமிழக பள்ளிகளைத் திறக்க திட்டம்? அரசுக்கு அழுத்தம்!

*மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை முதுநிலை வகுப்புகள்) டிசம்பர் 7ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் 2020 21 கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கான விடுதிகளும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

*நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வரும் நாட்களில் நோய்த்தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 14 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

*சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.



*அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிசம்பர் 1 முதல் 31 வரை நடத்த அனுமதிக்கப் படுகிறது. கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

புரேவி புயல்: எங்கெல்லாம் கன மழை பெய்யும் தெரியுமா?

*வரும் நாட்களில் நோய்த்தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.

*வெளிமாநிலங்களில் இருந்து (புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களைத் தவிர்த்து) தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ பாஸ் முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.



ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் தடைகள் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளதால் இதற்கான தடை தொடரும். தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறையின்படி எந்தவிதமான தடங்கலும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி