ஆப்நகரம்

11 பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டிக்கு தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம்!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முண்டைக்கல் பகுதியில் 11 பிள்ளைகளை பெற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டி கோலம்மாளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்துள்ளன.

Samayam Tamil 25 Feb 2019, 7:39 am
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முண்டைக்கல் பகுதியில் 11 பிள்ளைகளை பெற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டி கோலம்மாளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்துள்ளன.
Samayam Tamil Kolammal


குமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சிக்குட்பட்ட முண்டைக்கல் பகுதியை சேர்ந்தவர் கோலம்மாள் (85). 5 பெண் குழந்தைகளும் 6 ஆண் குழந்தைகளும் ஆக 11 பிள்ளைகளை பெற்ற கோலமாளை தற்சமயம் கவனிப்பார் இல்லாமல் நோய்வாய்பட்டு படுக்கையில் உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் ஆரல்வாய்மொழியில் வசிக்கும் இவரது மூத்த மகன் வந்து தாயரை கவனித்து கொள்வதாக கூறி தாயாரை தன்னுடைய வீட்டில் அழைத்து சென்றார்.

தாயாரின் கைகளில் இருந்த 28,000 ரூபாயை மகனிடம் நம்பி கொடுத்துள்ளார் பணத்தை பெற்ற மகன் பத்து நாட்கள் கழித்து மீண்டும் முண்டைக்கல் பகுதியிலுள்ள கோலமாள் வசிக்கும் சிறு குடிசையில் கொண்டு விட்டுவிட்டு சென்றுள்ளார். கோலமாளுக்கு உணவு மற்றும் ஆடைகள் இல்லாததால் கிராம மக்களே அவருக்கு உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவி வந்த நிலையில் இன்று பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூதாட்டிக்கு உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி