நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கஞ்சா சாக்லேட் விற்பனை விவகாரத்தில், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்கம் கேட்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சில நாட்கள் முன்பாக, சென்னை ஆர்கே நகரில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் கஞ்சா கலந்த சாக்லேட் சாப்பிட்டு, மயக்கம் அடைந்தனர். தீவிர உடல்நலம் பாதித்த மாணவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் சோதனை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், சுற்றுப்புற கடைகளில் இருந்து ஏராளமான கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், கஞ்சா சாக்லேட் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக, விரிவான விசாரணை நடத்திவரும் அதிகாரிகள், இதுதொடர்பாக, தனியார் குடோனில் இருந்து மூட்டை மூட்டையாக கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல, கோவில்பட்டி அருகேயும் ஏராளமான மூட்டைகளில் போதை சாக்லேட்டுகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் போதை சாக்லேட் விற்பனையை தடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி, சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த சில வாரங்கள் அறிக்கை சமர்ப்பிக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சில நாட்கள் முன்பாக, சென்னை ஆர்கே நகரில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் கஞ்சா கலந்த சாக்லேட் சாப்பிட்டு, மயக்கம் அடைந்தனர். தீவிர உடல்நலம் பாதித்த மாணவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் சோதனை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், சுற்றுப்புற கடைகளில் இருந்து ஏராளமான கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், கஞ்சா சாக்லேட் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக, விரிவான விசாரணை நடத்திவரும் அதிகாரிகள், இதுதொடர்பாக, தனியார் குடோனில் இருந்து மூட்டை மூட்டையாக கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல, கோவில்பட்டி அருகேயும் ஏராளமான மூட்டைகளில் போதை சாக்லேட்டுகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் போதை சாக்லேட் விற்பனையை தடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி, சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த சில வாரங்கள் அறிக்கை சமர்ப்பிக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.