ஆப்நகரம்

மதுரையில் அல்குவைதா ஆதரவாளர்கள் 3 பேர் கைது

அல்குவைதா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 28 Nov 2016, 7:42 pm
மதுரை: அல்குவைதா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil nia arrested 3 terrorist in madurai
மதுரையில் அல்குவைதா ஆதரவாளர்கள் 3 பேர் கைது


மதுரையில் அல்குவைதா ஆதரவு அமைப்பினர் செயல்படுவதாக தேசிய புலனாய்வு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவர்கள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், மதுரையில் பதுங்கி இருந்த முகம்மதுகரீம் ( புதூர் உஸ்மான் நகர் ), அப்பாஸ்அலி ( இஸ்மாயில்புரம் ), அசீப் சுல்தான் முகம்மது ( ஜி.ஆர்.நகர்) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்களின் கூட்டாளியான ஹக்கீம், தாவூத்சுலைமான் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பிரதமர் மோடி உள்ளிட்ட 22 தலைவர்களை கொலை செய்ய இவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. கைதானவர்கள் மீது அல்குவைதா அமைப்பில் ஆட்கள் சேர்ப்பு மற்றும் நாச வேலைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
NIA arrested 3 terrorist in Madurai

அடுத்த செய்தி