ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக நிதி திரட்டியதாகவும், அந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் சென்னையை சோ்ந்த வாலிபா் ஒருவரை காவல் துறையினா் நேற்று கைது செய்தனா்.
உலகின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பினா் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இந்தியாவின் அனைத்து மாநில அந்த அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் நபா்கள் கண்டுபிடிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சென்னையில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாளர் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஓட்டேரியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, சாகுல் அமீது என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாகவும், நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சாகுல் அமீது, பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று கைது செய்யப்பட்ட சாகுல் அமீதையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜா மொய்தீனையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பினா் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இந்தியாவின் அனைத்து மாநில அந்த அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் நபா்கள் கண்டுபிடிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சென்னையில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாளர் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஓட்டேரியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, சாகுல் அமீது என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாகவும், நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சாகுல் அமீது, பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று கைது செய்யப்பட்ட சாகுல் அமீதையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜா மொய்தீனையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.