ஆப்நகரம்

கோவையைத் தொடா்ந்து மதுரையிலும் என்ஐஏ அதிகாாிகள் சோதனை

கடந்த வாரம் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினா் சோதனை நடத்திய நிலையில், தற்போது மதுரையிலும் என்ஐஏ அதிகாாிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

Samayam Tamil 16 Jun 2019, 6:14 pm
இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக கருத்துகளை முகநூலில் பதிவு செய்த மதுரை மாணவர் முர்ஷித்திடம் தேசிய புலனாய்வு அமைப்பினா் விசாரணை மேற்கொண்டனா்.
Samayam Tamil Police protest


இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டா் பண்டிகையின் போது நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பினை தொடர்ந்து தேசிய புலானாய்வு அமைப்பினா் தொடர்ந்து தமிழகத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வந்தனர்.

இது தொடர்பாக கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) 3 பேரை கைது செய்து விசாராணை செய்தது. இதில் அவர்களுக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை பரப்பியுள்ளனர். மேலும் இவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் NIA அமைப்பினர். நேற்று இரவு வில்லாபுரம் பகுதியில் உள்ள சதக் அப்துல்லா என்பவரின் மகன் முர்ஷித் (வயது 20) என்பவரை விசாரணைக்கு ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவர் அரபி பாட சாலையில் படித்து வரும் மாணவர். இவர் முகநூல் மூலம் கோவையில் நண்பர்களுடன் தொடர்பு வைத்துள்ளது தெரிய வந்தது. முதல் கட்ட விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட மாணவன் முர்ஷித் தொடர்ந்து எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என்ற நிபந்தைனையின் பேரில் விடுவிக்கபட்டுள்ளார்.

கடந்த வாரம் கோவையில் நடத்தப்பட்ட சோதனையில், ஷாஜகான், முகனமு உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய மூவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவா்கள் ஐஎஸ் ஆதரவாளா்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானது. இதனைத் தொடா்ந்து அவா்கள் மூவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

அடுத்த செய்தி