ஆப்நகரம்

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: கோவையில் 5 இடங்களில் சோதனை

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில், இன்று கோவையில் 5 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை நடத்தினர்.

Samayam Tamil 9 May 2018, 5:31 pm
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில், இன்று கோவையில் 5 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை நடத்தினர்.
Samayam Tamil covai sasi


கடந்த 2016ம் ஆண்டு கோவையில் இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், தாம், அபுதாஹிர், முபாரக் மற்றும் சுபேர் ஆகிய நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர், என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி இந்த வழக்கை தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்நிலையில், இன்று என்ஏஐ அதிகாரிகள் கோவையில் அரஸ், அஜீஸ், விபின் ரகுமான், முகமது அலி மற்றும் சதாம் உசேன் ஆகிய 5 பேரின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 30 என்ஏஐ அதிகாரிகள் 5 குழுக்களாகப் பிரிந்து சென்று சோதனை நடத்தியதை அடுத்து, மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி