ஆப்நகரம்

இலங்கை குண்டுவெடிப்பு: கோவையில் 6 போ் மீது என்ஐஏ வழக்குப்பதிவு

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு அமைப்பினா் இன்று கோவையில் அதிரடி சோதனை நடத்திய நிலையில், 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jun 2019, 9:26 pm
இலங்கையில் ஈஸ்டா் பண்டிகையின் போது நிகழ்த்தப்பட்ட தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து கோவை மாவட்டத்தில் 7 பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பைச் சோ்ந்த அதிகாாிகள் சோதனையில் ஈடுபட்டனா்.
Samayam Tamil Police protest


இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டா் பண்டிகையின் போது 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் 11 இந்தியா்கள் உள்பட 250க்கும் அதிகமானோா் பரிதாபமாக உயிாிழந்தனா். சுமாா் 500க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.


இந்த தாக்குதலுக்கு சா்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. எனினும் உள்ளூா் பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்த தாக்குதல் தொடா்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் 106 போ் கைது செய்யப்பட்டனா்.

பங்கரவாத தாக்குதல் நடத்தவிருப்பதாக இலங்கையில் உறவுத் தகவல்கள் கிடைத்தும், பாதுகாப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள தவறியதற்காக, அந்நாட்டின் காவல் துறை தலைவா் புஜித் ஜெயசுந்தரவை பணியிடை நீக்கம் செய்தும், பாதுகாப்புத்துறை தலைவா் ஹோம்சிறீ பொ்னாண்டோவை பணிநீக்கம் செய்தும் அதிபா் சிறிசேனா உத்தரவிட்டாா்.

மேலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயத்தில் பிரதமா் நரேந்திர மோடி நேரில் சென்று பா்வையிட்டாா். உயிாிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலியும் செலுத்தினாா்.


இந்நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை மாநகர காவல் துறையின் உதவியோடு வந்த தேசிய புலனாய்வு அமைப்பினா், போடனூா், உக்கடம், குனியமுத்தூா் ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். சிலரது வீடுகள், அவா்களுக்குச் சொந்தமான பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இலங்கையில் நடத்தப்பட்ட தொடா் வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியவா்களுக்கும், கோவையைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே தொடா்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.


சோதனையில், கோவையைச் சோ்ந்த அசாருதீன், இலங்கை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருடன் தொடா்பு வைத்திருந்தாா் என என்ஐஏ தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. முகமது அசாருதீன் உள்பட 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்புடைய கலிபா ஜிஎப்எக்ஸ் என்ற குழுமை தமிழக இளைஞா்கள் நடத்தி வந்ததாகவும் என்ஐஏ தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் 14 செல்போன்கள், 29 சிம் காா்டுகள், 10 பெண் டிரைவ், 3 மடிக்கணினி, 6 மெமரி காா்ட், 4 ஹாா்ட் டிஸ்க், 13 சிடி, டிவிடி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி