ஆப்நகரம்

பொங்கல் விழா போட்டியில் பங்கேற்று அசத்திய உதகை ஆட்சியர்!

உதகை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுற்றுலா பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கலந்து கொண்டு விளையாடியது அங்கிருந்த மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Samayam Tamil 16 Jan 2019, 10:09 am

ஹைலைட்ஸ்:

  • உதகை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுற்றுலா பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது
  • ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கலந்து கொண்டு விளையாடியது அங்கிருந்த மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பொங்கல் விழா போட்டியில் பங்கேற்று அசத்திய உதகை ஆட்சியர்!
பொங்கல் விழா போட்டியில் பங்கேற்று அசத்திய உதகை ஆட்சியர்!
உதகையில் நடைபெற்ற பொங்கல் விளையட்டு போட்டிகளில் ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கலந்து கொண்டு விளையாடியது அங்கிருந்த மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இயற்கைக்கும், உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், உதகை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுற்றுலா பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கலந்து கொண்டார். குறிப்பாக லமன் ஆன் தி ஸ்பூன் விளையாட்டில் அவர் பங்கேற்று விளையாடியது அங்கிருந்த பார்வையாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் கடந்த வாரம், நீலகிரியில் நடைபெற்ற ஹேப்பி சாலை திறப்பு விழாவில், ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுடன் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி